tamilnadu

img

சேலம்: ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி  மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

 சேலம், செப்.21- சேலத்தில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் சனி யன்று துவக்கி வைத்தார். சேலம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், போஷன் அபியான் தேசிய ஊட்டச்சத்து விழிப் புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி பணியா ளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி யானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி திருவள்ளுவர் சிலை வழியாக மாநகராட்சி அலுவலக சாலை, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சாலை வழியாக மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் பரிமளா தேவி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.