tamilnadu

img

தமிழகத்தில் மூடப்படும் வாங்கல் ரயில் நிலையம்!காரணம் என்ன?

தமிழகத்தில், பயணிகளிடையே போதுமான வரவேற்பு இல்லாத காரணத்தால்,  வாங்கல் ரயில் நிலையம் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின், கரூர் - சேலம் வழித்தடத்தில் உள்ள வாங்கல் ரயில் நிலையம்தான் மூடப்படவிருக்கும் அந்த ரயில் நிலையம். இது நாளை முதல் அதாவது ஜனவரி 25ஆம் தேதி மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அப்பகுதி மக்களிடையே வாங்கல் நிலையம் பயன்பாடு பெரிய அளவில் இல்லை. சில நாட்கள் மட்டும் ஒரு சில பயணிகள் நிலையத்துக்கு வந்து, ரயிலில் ஏறிச் சென்று வந்தனர். அதனால், வாங்கல் ரயில்வே நிலையத்தை மூடுவது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வந்தது.
இதன் அடிப்படையில் வாங்கல் ரயில்வே நிலையத்தை  மூடுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம்  அறிவிப்பு வெளியிட்டது.
அதில், பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் வாங்கல் ரயில் நிலையம் மூடப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, வாங்கல் ரயில் நிலையத்தில் இனி எந்த ரயில்களும் நிற்காது என்றும் இன்று மட்டுமே இந்த ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லும் என்றும் ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
அது மட்டுமல்லாமல், பயணிகளுக்கு அந்த ரயில் நிலையத்தில் பயணச்சீட்டும் வழங்கப்படாது, வேறு எங்கிருந்தும் இந்த ரயில்நிலையத்துக்கான பயணச்சீட்டும் வழங்கப்படாது என சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.