சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைப் பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சைப் பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் முதல் மாடியில் இருந்து நோயாளிகள் அவரச அவசரமாகப் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டனர்.
மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
தீயை அணைக்கும் பணியில் தீயணைக்கும் வீரர்களும் தீவிரமாக போராடி தீயை அணைத்தனர்.
சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் எதிரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது.
இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் இயங்கி வரும் நிலையில்
அறுவை சிகிச்சைப் பிரிவில் திடீரென புகை ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட புகை காரணமாகவும், மின் கசிவு காரணமாகவும் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.