சேலம், அக்.7- நூறு நாள் வேலைத் திட்டத்தை இரு நூறு நாட்களாக உயர்த்தி பணி வழங்கிட வேண் டுமென வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் புதனன்று இரண் டாவது நாளாக மனு கொடுக்கும் போராட் த்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை நாட் களை 200 நாட்களாகவும், தினக்கூலி 600 ஆகவும் உயர்த்தி வழங்கிட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பேரூராட்சி பகுதி கள் உள்ளிட்ட சிறு நகரங்களுக்கான வேலை வாய்ப்பு திட்டத்தை துவங்கிட வேண்டும். கொரோனா கால நிவாரண மாக குடும்பத்திற்கு மாதத்திற்கு ரூ.7500 வழங்கிட வேண்டும். 60 வயதை கடந்த அனைவருக்கும் ரூ.3 ஆயிரம் முதியோர் ஓய்வு ஊதியமாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் புதனன்று இரண்டாவது நாளாக மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருப்பூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு சங்கத்தின் வட்டார தலைவர் எம்.சின்ராஜ் தலைமையில் மனு கொடுக்கும் போராட் டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாநிலப்பொதுச்செயலாளர் வி. அமிர்த லிங்கம், மார்க்சிஸ்ட் கட்சியின் ஓமலூர் தாலுகா செயலாளர் அரியா கவுண்டர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல், கெங்கவல்லி தாலுகா கீரிப் பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்தில் சங்கத்தின் மாவட் டத் தலைவர் தங்கவேல், நிர்வாகி வெங்க டாசலம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.