tamilnadu

img

காவல் துறையினர் தாக்குதலை கண்டித்து இஸ்லாமிய பெண்கள் ஆவேசம்

சேலம், பிப். 17- குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும் பப்பெற வலியுறுத்தி சென்னை வண்ணாரப் பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர் கள் மீது காவல்துறையினர் தடியடி நடத் திய சம்பவத்தை கண்டித்து, சேலம் கோட்டை பகுதியில் இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதோடு,பெண் கள் மற்றும் குழந்தைகள் என அனைவ ரையும் கைது செய்தனர். இந்த சம்ப வத்தை கண்டித்து தமிழகம் முழுவதும்  பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடு பட்டனர்.அதன் ஒரு பகுதியாக சேலத்தில் இஸ்லாமிய பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் கைகளில் தேசியக் கொடியை ஏந்தியும் மற்றும் சுதந்திர இந்தி யாவில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு குறித்த பதாகைகளை ஏந்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.  இந்த போராட் டத்தை சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஐ.ஞானசௌந்தரி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்