tamilnadu

img

பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரை கண்டித்து ஆசிரியர்கள் கடிதம்

சேலம்,நவம்பர்.04- பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுக்கு எதிராகத் துணை வேந்தர் ஜெகநாதன் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுவதைக் கண்டித்து ஆசியர் சங்கத்தினர் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக விதிமுறைகளை  அரசுக்குத் தெரிவித்ததற்காக ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் பேராசிரியர் பிரேம்குமாரை கடந்த 2 ஆண்டுகளாக பணிநீக்க செய்துள்ளார் துணை வேந்தர் ஜெகநாதன்.
அதுமட்டுமின்றி பட்டியலின ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு  நியாயமாகக் கிடைக்க வேண்டிய பணி உயர்வுக்கான கோப்புகளை அரசுக்கு அனுப்பாமல் துணை வேந்த ஜெகநாதன் காலம் தாழ்த்துவதாகவும், 2005 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த பட்டியலின பேரசியருக்கு இன்று வரை பதவி உயர்வு இருப்பதைக் கண்டித்தும், கல்வியல் துறைக்கு நிரந்தர பட்டியலின பெண் பேராசிரியர் இருக்கும்போது, தற்காலிக ஆசிரியையை துறைத் தலைவராக நியமித்ததுள்ளதைக் கண்டித்தும் உடனடியாக பெரியார் பல்கலைக்கழக துணை வேந்த மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக்கும் உயர் கல்வித்துறை செயலாளருக்குப் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.