சேலம், அக்.19- குரும்பட்டி உயிரியல் பூங்காவிற்கு புதியதாக வந்துள்ள நீர்ப்பறவைகளை சனியன்று சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் வனத்துறை அதிகாரியிடம் ஒப் படைத்தார். சேலம் மாவட்ட மக்களின் முக்கிய பொழுதுபோக்கு சுற்றுலாத் தலமாக விளங்கி வருவது சேலம் குருவம்பட்டி உயிரியல் பூங்கா. இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு விலங்குகள் மற்றும் 3டி எனப்படும் முப்பரிமாண ஓவியங்கள் வரையப்பட்டு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சனி யன்று சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து நீர்ப்பறவைகளான நாரை, கொக்குகள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு பறவைகள் வரவழைக்கப்பட்டது. இந்த பறவைகளை சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் குருவம்பட்டி உயிரியல் பூங்காவில் சென்று சேலம் மாவட்ட வனத்துறை அதிகாரி பெரியசாமியிடம் ஒப்ப டைத்தார். இதைத்தொடர்ந்து பூங்காவின் வளர்ச்சி பணிகள் குறித்தும், மேற்கொண்டுள்ள பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும் அங்கு உள்ள பறவைகள் மற்றும் வன விலங்குகளை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் சேலம் உயிரியல் பூங்காவின் வன சரக அலுவலர் முரளிதரன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.