மேட்டூர், ஆக. 26 - பெண் தொழிலாளர்களிடம் அத்துமீறும் நகராட்சி மேற்பார் வையாளரை நீக்க வலியுறுத்தி மேட்டூர் நகராட்சி முன்பு சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. மேட்டூர் நகராட்சி ஒப்பந்தப் பிரிவு தூய்மைப்பணியாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப் மற்றும் சீருடைப் பணிக் கருவிகள், பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்படாதது. பணி மேற்பார்வையாளரான ஆனந்தன் பெண் தொழிலாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வது மற்றும் இழிவான வார்த்தைகளைப் பிரயோகிப்பது தொடர்பாக தூய் மைப்பணியாளர்கள் சார்பில் நக ராட்சி ஆணையரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதுதொடர் பாக நகராட்சியின் ஒப்பந்த நிறு வன துணைப்பொது மேலாளர் புதனன்று மாலை பேச்சுவார்த் தைக்கு அழைத்திருந்த நிலையில், திடீரென சந்திக்க மறுத்து விட்டார். இது தொழிலாளர்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும், கொந்த ளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து மேட்டூர் நகராட்சி முன்பு சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழி யர் சங்கம் சார்பில் கண்டன கூட் டம் நடைபெற்றது.
இதில் பணி மேற் பார்வையாளர் ஆனந்தனை மாற் றும் வரை தொடர்ந்து போராட்டங் களை முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சி.கருப்பண்ணன் மற்றும் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்ட னர்.