tamilnadu

img

முழுக்கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை

மேட்டூர்:
மேட்டூர் அணை நீர்மட்டம் முழுக் கொள்ளவை எட்டியது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால்  கர்நாடக அணைகள் நிரம்பின. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடியும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 39 ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுப்படுகிறது. தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவிலும், ஒகேனக்கல்லிலும் நீர்வரத்து வினாடிக்கு 79 ஆயிரம் கனஅடியாக உள்ளது.மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 76 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை முழுக் கொள்ளவான 120 அடியை எட்டியது. இதனால்  சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.காவிரி கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட் டுள்ளது.  மேட்டூர் அணை மற்றும் அதன் கரையோரங்களில் பாதுகாப்பற்ற முறை
யில் நீரில் இறங்கி குளிப்பதையோ, மீன்பிடிப்பதையோ, செல்ஃபி எடுப்பதையோ தவிர்க்க வேண்டும் என்றுமாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

;