tamilnadu

img

சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலம் முதல்வர் திறந்து வைத்தார்

சேலம்:
சேலத்தில் ரூ.441 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜூன் 11 வியாழனன்று திறந்து வைத்தார்.

புதிய சேவை திட்டத்தின் கீழ் சேலம் மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, ஐந்து ரோட்டை மையப்பகுதியாக கொண்டு இரண்டடுக்கு மேம்பாலம் 7.87 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக  கட்டப்பட்டுள்ளது. குரங்குச்சாவடி முதல் புதிய பேருந்து நிலையம் வழியாக அண்ணா பூங்காவில் முடியும் பாலம் 5.01 கிலோமீட்டர் நீளம் கொண்டது. பாலத்தின் ஒரு பகுதி, ஏவிஆர் ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சந்திப்பு வரை மூன்று கிலோமீட்டர் தூரம் கொண்டது.
அந்த பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு ஜுன் 7 அன்று திறந்துவைத்தார். குரங்குச்சாவடி முதல் அண்ணா பூங்கா வரையிலான பாலத்தை 5 ரோடு அருகே வியாழனன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  திறந்து வைத்தார். பின்னர் பாலத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.அதனைத்தொடர்ந்து, சேலம் லீ பஜார் பகுதியில் 46 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரயில்வே உயர்மட்ட மேம்பாலத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

;