மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் நீர்திறப்பு 70 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் அங்குள்ள அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் 70 ஆயிரம் கனஅடிக்கும் மேலாக உபரிநீர் திறந்துவிடப்படுகிறது.