இளம்பிள்ளை, நவ. 11- சேலத்தில் உள்ள மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் வருடாந்திர ஆய்வு மேற்கொண் டார். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள காக்கா பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கணிகர் திங்களன்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என காவலர்க ளுக்கு அறிவுறுத்தினார். மேலும், காவல் நிலையத்தில் உள்ள பதிவேடு ஆவணங்களை தனிக்கை செய்தார். இதனைத் தொடர்ந்து காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப் போது காவலர் குடியிருப்புக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர காவலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர், காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை எஸ்பி தீபா கணிகர் நட்டு வைத்தார். அப்பொழுது காவல் நிலையத்தை தூய்மைப்படுத்தி வண்ணம் தீட்டி புதுப்பொலிவு டன் பசுமையான சூழல் ஏற்படுத்தி பராமரிப்பு பணிகள் செய்து முன் உதாரணமாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டு களை தெரிவித்தார். இந்த ஆய்வின்போது சங்ககிரி துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ், மகுடஞ்சாவடி காவல் ஆள் வாளர் (பொறுப்பு) சண்முகசுந்தரம், உதவி ஆய்வாளர்கள் பெரியசாமி, சாந்தி உள்ளிட்ட காவலர்கள் உடனிருந்தனர்.