tamilnadu

img

காவலர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டித்தர கோரிக்கை

இளம்பிள்ளை, டிச.1- சேலம் மாவட்டம், ஆட் டையாம்பட்டி காவல் நிலையம் அருகில் காவ லர்களுக்கு குடியிருப்புகள் கட்டி தர கோரிக்கை எழுந் துள்ளது.  சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி பகுதி யில் காவல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வா ளர் மற்றும் போலீசார் உள்ளிட்ட 25-க்கும்  மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.  இவர்களுக்கு காவல் நிலைய வளாகத்தி லேயே குடியிருப்புகள் உள்ளது. இந்த குடி யிருப்பு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு  கட்டப்பட்டவையாகும். தற்போது இந்த  குடியிருப்புகள் இடியும் நிலையில் உள்ளது.  இதனால் இக்குடியிருப்புகளில் யாரும் குடியிருக்கவில்லை.   இந்த நிலையில் இங்கு  பணிபுரியும் காவலர்கள்   உள்ளூர் மற்றும்  வெளி மாவட் டங்களை சேர்ந்தவர்கள். ஏற்கனவே பணிச்சுமையால் தவித்து வரும் நிலையில்,  அதிக வாடகைக்கு கொடுத்து வருகின்ற னர். மேலும் அதிக தூரத்தில் இருந்தும் பணிக்கு வருகின்றனர். குறிப்பாக பெண் கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.  எனவே காவல் நிலைய வளாகத்தில் உள்ள  பழைய குடியிருப்புகளை அகற்றிவிட்டு புதிய குடியிருப்புகள் கட்டி தரவேண்டு மென காவலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.