tamilnadu

இளம்பிள்ளையில் நிறைமாத கர்ப்பிணிக்கு கொரோனா

இளம்பிள்ளை, ஜூலை 12- இளம்பிள்ளை அருகே ஏகாபுரம் ஊராட்சியில் நிறை மாத கர்ப்பிணி பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மகுடஞ்சாவடி ஒன்றியம், ஏகாபுரம் ஊராட்சியில் நிறைமாத கர்ப்பி ணிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொ டர்ந்து அவர் சிகிச்சைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட்டார்.

இதையடுத்து, அவர் வசித்த பகுதி முழுவதும் தடுப்புகள் கொண்டு அடைக்கப் பட்டு கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் தக வலை சேகரிப்பதில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

;