tamilnadu

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா

இளம்பிள்ளை, ஜூலை 21- இளம்பிள்ளை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், இடங்கணசாலை பேரூராட்சி பகுதிக் குட்பட்ட காடையாம்பட்டி பகுதியில் வசிக்கும் 70 வயது முதியவர் இளம்பிள்ளையில் மளிகை கடை, பேன்சி ஸ்டோர் ஆகியவற்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரி டம் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்தபோது 40 வயது மகள் மற்றும் 13,17,18 வயதான பேரக் குழந்தைகள்  உட் பட நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர்கள் வசித்து வந்த காடையாம்பட்டி பகுதிகளைச் சுற்றியும் பேரூராட்சி சார்பில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக் கும் பணிகள் நடைபெற்றது. அப்பகுதியில் மகுடஞ்சாவடி சுகா தாரத்துறையினர் மருத்துவ குழுவினர்  பரிசோதனை செய்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

;