tamilnadu

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் 3 பேருக்கு கொரோனா

சேலம், ஜூலை 11 - சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் பணியாற்றும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆட்சியர் அலுவலகம் மூடப் பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடை பெற்றது.

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் பேரூராட்சி களின் உதவி இயக்குனர் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இத னையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் மூடப்பட்டு கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணி முழு வீச்சில் நடை பெற்று வருகின்றது.

இதனால் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் மூடப்பட்டது. மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரி யும் அனைத்து ஊழியர்களும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

;