tamilnadu

img

முதல்வர் மாவட்டத்தில் தொடரும் ரேசன் அரிசி கடத்தல் வாலிபர் சங்கம் நூதனப் போராட்டம்

சேலம், செப். 25- தமிழக முதல்வர் மாவட் டத்தில் நடைபெறும் அரிசி கடத்தலை தடுக்கக்கோரி வாலிபர் சங்கத்தினர் சேலம் தலைமை தபால் நிலை யத்தில் முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகரப் பகுதி களில் உள்ள நியாய விலை கடைகளில் அதிகாரிகளின் துணையுடன் அரிசியை தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது.

தனியாகவும், குழுக்களாகவும் கடத்தப் படும் ரேசன் அரிசியை மாவாக மாற்றி சேலத்தில் உள்ள அப்பளம் தயாரிக்கும் நிறு வனங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்றும் வருகின்றனர். இவ்வாறு ரேசன் அரிசி கடத்துபவர்களை பலமுறை வாலிபர் சங்கத்தினர் பொதுமக்கள் துணையுடன் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் தற்போது வரை தொடர்ந்து எவ்வித தடை யின்றி ரேசன் அரிசி கடத்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ரேசன் அரிசி கடத்தலை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல் லும் வகையிலும், கடத்தலில் தொடர்பு டைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். ரேசன் பொருட்கள் முறையாக மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என வலியுறுத்தி, இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பொது மக்களுடன் இணைந்து தமிழக முதல்வ ருக்கு ஆயிரம் தபால் அனுப்பும் போராட்டத் தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்திற்கு வாலிபர் சங்க கிழக்கு மாநகரத் தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். இதில், மாநகரச் செய லாளர் பெரியசாமி, துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.