tamilnadu

img

மகுடஞ்சாவடியில் ரஜினி மீது புகார்

இளம்பிள்ளை, ஜன.19- பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசிய தாக ரஜினி மீது மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.  சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் திராவிட விடுதலை கழகத்தினர் சனியன்று நடிகர் ரஜினி காந்த் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்த னர். அந்த மனுவில், சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில்  தந்தை பெரியார் பெய ருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாக ரஜினி பேசியுள்ளார். இது உண்மைக்கு புறம்பானது. வதந்தி யைப் பரப்பி, அதன் மூலம் பொது அமைதியைக் சீர் குலைக் கும் வகையில் அவர் பேசியுள்ளார். எனவே, நடிகர் ரஜினி  மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பிள்ளை திராவிடர் விடுதலைக் கழ கத்தின்  நகர செயலாளர் தங்கதுரை தலைமையில் காவல் நிலையத்தில் அளித்தனர்.

;