tamilnadu

விநாயகர் சிலை வைப்பதில் முன்விரோதம் சேலம் அருகே கல்லூரி மாணவர் படுகொலை

சேலம், செப்.7- சேலம் அருகே விநாயர் சிலை வைப்பதில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது. சேலத்தை அடுத்த நாழிக்கல் பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் திலீப்குமார் (19). நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ., பொரு ளாதாரம் படித்து வந்தார். திலீப்குமார் மற்றும் நண்பர்கள் திருநாவுக்கரசு, சரவணன், சூர்யா ஆகியோர் ஒவ் வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி யின்போது விநாயகர் சிலை வைத்து கொண்டாடி வந்தனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் நண்பர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தாண்டு திலீப்குமார் தனியாகவும், திருநாவுக் கரசு, சரவணன், சூர்யா ஆகியோர்  தனியாகவும் விநாயகர் சதுர்த்தி  விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில்  வியா ழனன்று (செப்.5) காலையில் திருநாவுக்கரசு மற்றும் திலீப்குமாருக் கும் இடையே  மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெள்ளி யன்று மாலை திலீப்குமாரின் வீட்டுக்கு கூட்டாளிகளுடன் சென்ற  திருநாவுக்கரசு, அங்கே திலீப்குமார் இல்லாததால் அவருடைய தந் தையை எச்சரித்துவிட்டு வந்துள் ளார். அதன்பிறகு இரவு 8 மணியள வில் மீண்டும் சென்ற அவர்கள்,  திலீப்குமாரிடம் தகராறில் ஈடுபட் டனர். அப்போது கத்தியை எடுத்து திலீப்குமாரை வெட்டினர். மேலும் தப்பிக்க முயன்றபோது திலீப்குமாரை விரட்டி விரட்டி வெட்டியுள்ளனர். திலீப்குமாரை காப்பாற்ற வந்த அவருடைய நண்பர் சரண் என் பவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. பின்னர் திருநாவுக்கரசுவும், அவ ருடைய நண்பர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பலத்த காய மடைந்த திலீப்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சேலம் அரசு மருத் துவமனைக்குக் கொண்டு சென்ற னர். மருத்துவர்கள் பரிசோதனை யில் அவர் வரும் வழியிலேயே  உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் புறநகர் காவல் துணை கண்காணிப் பாளர் உமாசங்கர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தனர். இந்த கொலையில் திருநாவுக்கரசு, சரவணன் மற்றும் சேலம் பச்சப் பட்டியைச் சேர்ந்த ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள் ளது. இதற்கிடையே, கொலையாளி களை உடனடியாக கைது செய் யக்கோரி திலீப்குமாரின் உறவினர் கள் சேலம் அரசு மருத்துவமனை முன்பு திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலையாளிகளுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும், அதனால் அவர்களை கைது செய் யாமல் காவல்துறை தவிர்த்து வருவ தாகவும்கூறி, உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

;