சேலம், பிப்.13- சிஐடியு சேலம் மாவட்ட சாலை போக்குவரத்து மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை அமைப்பு மற்றும் நல வாரிய புதிய பதிவு முகாம் வியாழனன்று ஏற்காட்டில் நடைபெற்றது. சிஐடியு சாலைப்போக்கு வரத்து மற்றும் மோட்டார் தொழிலாளர் சங்க ஏற்காடு கிளை ஒண்டிக்கட்டை பகுதியில் கொடியேற்றத் துடன் துவங்கியது. சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சாலைப் போக்குவரத்து சம் மேளன பொதுச் செயலாளர் எஸ்.மூர்த்தி சங்க கொடியை ஏற்றி வைத்தார். இதை யடுத்து புதிய நலவாரிய பதிவு முகாமை தொழிலாளர் துணை ஆணையாளர், சமூக பாதுகாப்பு திட்டம் மஞ்சுநாதன் பங் கேற்று நலவாரிய பதிவு செய்தார். சிஐடியு மாவட்ட துணை செயலாளர் ஏ.கோவிந்தன், மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் பழனிசாமி ஆகி யோர் பங்கேற்றனர். முன்னதாக, இச்சங்கத்தின் ஏற்காடு புதிய கிளையின் தலைவராக சரவணன், செயலாளராக கருணாகரன், பொருளாள ராக லோகு, உதவி செயலாளர்களாக தங்கவேலு, பாலமுருகன், உதவி தலை வர்களாக ராமர், சந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.