சேலம், மே 4-ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் சேலம் சிபிசிஐடிகாவல் துணைகண்காணிப்பாளர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் குமார்விசாரணைக்கு ஆஜரானார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் சட்டவிரோதமாக குழந்தைகள்விற்பனை சம்பவம் சமீபத்தில்அம்பலமானது. தமிழகம்முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில்குழந்தைகளை விற்பனை செய்து வந்த,ராசிபுரத்தை சேர்ந்த நர்ஸ் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர்ரவிச்சந்திரன், கொல்லிமலை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில்,கொல்லிமலை மற்றும் பள்ளிபாளையத்தை சேர்ந்த 18 குழந்தைகள், தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும், பல ஊர்களில் புரோக்கர்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. வறுமையில் உள்ள பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை, குறைந்த விலைக்கு வாங்கி, குழந்தை இல்லாமல் ஏங்கும் வசதி படைத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.மேலும், பெண் புரோக்கர்களாக செயல்பட்ட ஈரோட்டை சேர்ந்த பெண்களும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் அளித்த புகாரை தொடர்ந்து, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கின் விசாரணை அதிகாரியாக சேலம் சிபிசிஐடி டிஎஸ்பி கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளர். சேலம்இன்ஸ்பெக்டர் சாரதா, நாமக்கல் இன்ஸ்பெக்டர்பிருந்தா ஆகியோரும் விசாரணை குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் சேலம் சிபிசிஐடிகாவல் துணைகண்காணிப்பாளர்அலுவலகத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குனர்ரமேஷ் குமார்விசாரணைக்கு ஆஜரானார்.