சேலம், ஜூன் 9- பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சேலம் வந்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,ஞாயி றன்று காலை அஸ்தம்பட்டி யில் உள்ள விருந்தினர் மாளிகையில் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார். அப்போது, கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனை தீர்ப்பது குறித்தும், மாவட் டத்தில் அரசு திட்டப்பணிகள் செயல்படுவது குறித்தும் சில ஆலோசனைகளை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.