tamilnadu

img

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கிடுக பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சேலம், ஏப்.27 - ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு சம்பளம் வழங்கிடக்கோரி பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படாததால் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சேலம் மாவட்டத்தில் சனியன்று தொலைத் தொடர்பு மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இ.கோபால் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒப்பந்த தொழிலாளர்களின் திறனுக்கேற்ற ஊதியம் மற்றும் நிலுவையிலுள்ள சம்பளத்தை உடனடியாக வழங்கிடக்கோரி ஆவேச முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி எம்.செல்வம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

;