சேலம், அக்.20. சேலம் மாநகர பகுதியில் தடைசெய்யப்பட்ட புகை யிலை பொருட்கள் பறிமுதல்செய்யப்பட்டது. தமிழகத்தில் பான்பராக், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை புகையிலை பொருட்களுக்கு தடைவிதிக்கப் பட்டுள்ளது. ஆனாலும், பெரும்பாலான பகுதிகளில் இப்பொருட்கள் ரகசியமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த புகையிலை பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து ரகசியமாக கொண்டு வந்து, இங்கு விற்பனை செய்யப் படுகிறது. குறிப்பாக சேலம் செவ்வாய்பேட்டை, சூர மங்கலம், கிச்சிப்பாளையத்திற்கு லாரிகளிலும், பார்சல் சர்வீஸ் மூலமாகவும் போதை புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டு, குடோன்களில் பதுக்கப்படுகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இருந்து சூரமங் கலம் பகுதியில் இயங்கும் ஒரு தனியார் பார்சல் கம்பெனிக்கு பண்டல்கள் வந்துள்ளது. அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான ஹான்ஸ் இருந்தது. தகவலறிந்த மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அந்த பார்சல் சர்வீஸ் கம்பெனியில் உள்ள பண்டல்களை பரிசோதனை செய்தனர். அதில், 950 கிலோ ஹான்ஸ் இருந்தது. இதன் மதிப்பு ரூ.8 லட்சத்தை விட அதிகமாக இருக்கும் எனக்கூறப்படு கிறது. இதுதொடர்பாக சூரமங்கலம் காவல்துறையில் உணவு பாதுகாப்புத்துறையினர் புகார் அளித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், கடந்த வாரம், இதேபோல் வந்த பார்சல்களை கிச்சிப் பாளையம் அருகேயுள்ள களரம்பட்டியை சேர்ந்தவர்கள் வாங்கிச் சென்றது தெரிய வந்தது. அதன்பேரில், கிச்சிப் பாளையம் காவலர்கள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் களரம்பட்டியில் உள்ள ஆரிப் என்பவரது வீட்டில் சோதனையிட்டனர். மேலும், சித்திக் என்பவரது குடோனிலும் சோதனையிட்டனர். அதில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 1050 கிலோ போதை புகையிலை பொருட்கள் சிக்கியது. அதனை பறிமுதல் செய்தனர். இந்த போதை புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த சித்திக், ஆரிப் ஆகிய இருவரையும் பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் பீடி கம்பெனி நடத்தி வருபவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.