மகாராஷ்டிராவிலும் “இந்தியா” கூட்டணி தொகுதி பங்கீடு
மும்பை, மார்ச் 1- பாஜகவை ஆட்சி அதி காரத்தில் இருந்து அகற்ற 26 எதிர்க்கட்சிகள் ஒன்றி ணைந்துள்ள “இந்தியா” கூட்டணியில் தற்போது தொகுதி பங்கீடு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், தில்லி, ஹரியானா, குஜராத், கோவா, அசாம் ஆகிய மாநி லங்களில் “இந்தியா” கூட்ட ணிக் கட்சிகளின் தொகுதி பங்கீடு ஏற்கெனவே நிறைவு பெற்ற நிலையில், 48 மக்க ளவைத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா விலும் வெள்ளியன்று தொகு தி பங்கீடு நிறைவு பெற்றது.
48 தொகுதிகளில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு 20 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. பிர காஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி கட்சிக்கு சிவ சேனாவிற்கு ஒதுக்கப் பட்டுள்ள 20 தொகுதிகளில் இருந்து 2 தொகுதிகளும், சுயேச்சை வேட்பாளரான ராஜு ஷெட்டி என்பவருக்கு சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பங்கி லிருந்து ஒரு இடமும் உள் ஒதுக் கீடாக செய்யப்பட்டுள்ளது.அடுத்த 2 தினங்களில் வேட் பாளர் பட்டியலுடன் சீட் பங்கீடு குறித்தான அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளி யிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிளஸ் 2 தேர்வுகள் துவங்கின
சென்னை, மார்ச் 1 - தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 பேர் எழுதும் பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு வெள்ளியன்று (மார்ச் 1) தொடங்கியது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி யது. 9.30 மணிக்கே மை யங்களுக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 10 மணிக்கு விடைத்தாள் வழங்கப்பட்டது. 10.10 மணி க்கு வினாத்தாள் வழங்கப் பட்டு அதனை மாணவர்கள் சரி பார்த்து படிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது. 10.15 மணிக்கு தேர்வு தொடங்கி பகல் 1.15 மணி வரை நடை பெற்றது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங் களுக்கான தேர்வு நடைபெற்றது.
சென்னை வந்த 15 கம்பெனி துணை ராணுவம்
சென்னை, மார்ச் 1- மக்களவைத் தேர்தலை யொட்டி பாதுகாப்புக்காக தமிழ்நாட்டிற்கு 200 கம் பெனி துணை ராணுவ படையினர் வரவழைக்கப் பட உள்ளனர். இதில் முதற்கட்டமாக 25 கம்பெனி துணை ராணுவ படையினர் வருகை தரவுள்ளனர். இவர்களில் 15 கம்பெனி துணை ராணுவ படை வெள்ளியன்று (மார்ச் 1) தமிழகம் வந்தனர்.
பெங்களூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் ஒரு கம்பெனி துணை ராணுவ படையினர் வந்தனர். இதில் 90 பேர் இடம் பெற்றிருந்த னர். இவர்களை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் துணை ராணுவ படையினர் வெளி மாநிலங்களில் இருந்து வருகின்றனர்.