tamilnadu

img

இளைஞர் காவல் நிலைய மரணம்- வன்கொடுமைத் தடுப்புச் சட்ட த்தில் நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னையில் உள்ள பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் காவல் நிலையத்தில் மரணம் அடைய காரணமாக இருந்த அதிகாரிகள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சென்னை பட்டினப்பாக்கம் இளைஞர் விக்னேஷ் காவல்துறையினரின் விசாரணை வதையால் உயிரிழந்திருக்கிறார். அவருடன் கொடூரமாக தாக்குதலுக்கு உள்ளான சுரேஷ் என்பவர் சிகிச்சை அளிக்கப்படாமல் சிறைபடுத்தப்பட்டிருக்கிறார்.இத்தகைய போக்கை விசிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

இதற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

விக்னேஷுடன் கைது செய்யப்பட்டு காவல்துறையின் விசாரணை வதையால் பாதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிற இளைஞர் சுரேஷுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன் என அதில் தெரிவித்துள்ளார்.