tamilnadu

கோவிலையும் மதத்தையும் காட்டி ஓட்டு வாங்க முடியாது: வைகோ

சென்னை,ஜன.1- சென்னையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சுதந்திர இந்தியாவில் நெருக் கடி நிலையை விட மோசமான சட்டங்கள் பாஜக அரசு கொண்டு வந்திருக்கிறது. எதிர்க்கட்சிகள் உருவாக்கி இருக்கும் இந்தியா கூட்டணி, மக்கள் சக்தியைத் திரட்டி  மோடி அரசை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றும்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி வெற்றிகரமாக செயல்படு கிறது. இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடிய இடத்தில் மு.க.ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது. கோவிலையும் இந்து மதத்தையும் காட்டி தமிழ் நாட்டில் பாஜகவால் ஓட்டு வாங்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.