சென்னை, ஏப்.21- “வியாபாரிகள், பொதுமக்கள் ஆவணம் இன்றி இனி ரூ.50 ஆயிரம் எடுத்துச் செல்லலாம் என்றும் ஆனால் ஒரு சில பகுதிகளில் கட்டுப்பாடு தொடரும் என்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டதில் இருந்து, தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்தன. பொதுமக் கள், வியாபாரிகள் ஆவணங்கள் இல்லா மல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 18 ஆம் தேதி வரை பறக்கும் படையினரால் ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்செல்லப்பட்ட சுமார் ரூ.175 கோடி பணம், ரூ.150 கோடிக்கும் அதிகமான தங்கம், வெள்ளி நகைகள், பரிசு பொருட்கள், மதுபானம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்து விட்டாலும், மற்ற மாநிலங்களில் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடப்ப தால் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதி முறை அமலில் இருக்கும். ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம், நகைகள் எடுத்துச் செல்லக் கூடாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறி யிருந்தார். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரி வித்தனர். பணம் எடுத்துச்செல்ல அனு மதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சி களின் தலைவர்கள் வலியுறுத்தினர்.
இந் நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதி காரி சத்யபிரதா சாகு கூறுகையில், தமிழ கத்தின் எல்லை பகுதியான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள் ளிட்ட மாநிலங்களை ஒட்டிய பகுதிகளில் மட்டும் பறக்கும் படை சோதனை ஜூன் 4ஆம் தேதி வரை தொடரும். இந்த பகுதி யில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. தமிழகத்தில் மற்ற பகுதியில் (உள்பகுதிகளில்) பறக்கும் படை, நிலை கண்காணிப்பு, வீடியோ கண்காணிப்பு குழு வாபஸ் பெறப்படும். இதுகுறித்த உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது நடை முறைக்கு வந்துள்ளது என்று தெரிவித் தார்.