எழுத்தாளர் ச.லெனின் எழுதி, பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள ‘உயிர்த் தன்மையின் உறைவிடமே மார்க்சியம்’ எனும் நூல் திங்களன்று (ஜன 16) 46வது சென்னை புத்தகக்காட்சியில் வெளியிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூலை மூத்த தொழிற்சங்க தலைவர் டி.கே.ரங்கராஜன் வெளியிட, ஜி.அழகுநம்பி வெல்கின் பெற்றுக் கொண்டார். உடன் பாரதி புத்தகாலயம் க.நாகராஜன், தமுஎகச தலைவர் கி.அன்பரசன், நூலாசிரியர் ச.லெனின் ஆகியோர் உள்ளனர்.