சென்னை,நவ. 27 - உலக கழிப்பறை தினம் சென்னையில் அனுசரிக்க ப்பட்டது. இதை முன்னிட்டு திருவான்மியூர் அரசுப் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தி யில் தூய்மையாக இருத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளி வளாகத்தில் துப்புரவு மற்றும் ஒட்டு மொத்த தூய்மையை பராம ரிக்க உதவுவதில் மாணவ ர்களை தீவிரமாக ஈடுபடுத்து வதை நோக்கமாகக் கொண்டு, காசாகிராண்டு பிராப்கேர் முயற்சியில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன்மூலம் இளவயதி லேயே மாணவர்களுக்கு தூய்மை குறித்து கற்பிப்பதும் மற்றும் சரியான வழிமுறையில் அவர்கள் மனதில் இதை பதிய வைப்பதும் இம்முயற்சியின் நோக்கமாகும். காசா கிராண்டு பிராப்கேர் நிறுவனத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இப்பள்ளி க்கு நேரில் சென்று, முறையான தூய்மையை பேணுவது மற்றும் ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் மீது ஒரு விழிப்புணர்வு பயிலரங்கை நடத்தினர் என்று காசா கிராண்டு பிராப்கேர் – முதுநிலை செயல்துணை த்தலைவர் வெங்கட்ராமன் கூறினார். அத்துடன், பள்ளி முழுவதிலும் மற்றும் அதன் கழிப்பறைகளிலும் மிகப்பெரிய தூய்மைப்படு த்தும் பணியை இந்த தன்னார்வலர்கள் குழு மேற்கொண்டது. இச்செயல்திட்டத்தை என்றும் நினைவுகூரும் வகை யில் பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியை சிவகாமி, மாணவர்கள் மற்றும் காசா கிராண்டு பிராப்கேர் தன்னார்வலர்க ளால் மரக்கன்றுகள் நடப்பட்டன.