சென்னை, மார்ச் 16- இரண்டாம் உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாடு 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப் படும் என்று முதலமைச்சர் அறி வித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட் டுள்ளதாவது: “இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் இன்று கணித் தமிழும் இணைந்து நற்றமிழாக நானிலமெங்கும் சிறப் புடன் திகழ்கின்றது. தமிழ் மொழி, தொன்மை, தனித்தன்மை, பொது மைப் பண்பு, பண்பாடு, உயர்ந்த சிந்தனை, இலக்கியத் தனித் தன்மை பங்களிப்பு ஆகிய உயர்ந்த கோட்பாடுகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றதுடன், செம்மொழி என்ற தனித்தகுதியை பெற்றுள்ள அரும்பெரும் மொழியாகும். தமிழை, உயர்தனிச் செம் மொழி என்று முதன்முதலில் முன் மொழிந்தவர் தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர்.
வளம்பெற்ற நம் மொழிக்குச் செம்மொழித் தகு தியைப் பெற்றுத்தந்து தமிழர் களின் நூற்றாண்டுக் கனவை நன வாக்கியவர் முன்னாள் முதலமைச் சர் கருணாநிதி. திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டுகளாக தமிழ்நாடு அரசு தனிப்பெரும் நிலை யில் தகுதிவாய்ந்த தமிழறிஞர் களுக்குப் பல்வேறு விருதுகளை வழங்குவதோடு நாடறிந்த தமிழ றிஞர்களின் நூல்களை நாட்டுடை மையாக்குவதும், பண்டையத் தமி ழர் பண்பாட்டையும், பழங்காலத் தமிழர்களின் எழுத்தறிவு, நாகரிக வாழ்வு முறைமைகளை நுண்மை யோடு பறைசாற்றும் வகையில் கீழடி அருங்காட்சியகத்தை அமைத்து, அதன் தொடர்ச்சியாக பொருநை அருங்காட்சியகத்தை யும் அமைத்து வருவது தமிழ்ப் பண்பாட்டின் மணிமகுடங்களா கும்.
‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்தி ரங்கள் அனைத்தும் தமிழ்மொழி யில் பெயர்த்தல் வேண்டும்’ என்ற மகாகவி பாரதியின் கனவை நன வாக்கும் வகையில், அறிவியல், பொறியியல், மருத்துவம், தொழில் நுட்பம், வேளாண்மை மற்றும் பல் வேறு துறை சார்ந்த பாடநூல்களை தமிழில் மொழிபெயர்க்கும் பெரும் பணியினைச் செய்து வருவதும், செயற்கை நுண்ணறிவைப் போற் றும் வகையில் கணித் தமிழ் மாநாடு 24 நடத்தியதும், தாய்த்தமிழை உயிர்ப்போடும் வனப்போடும் வளர்த்தெடுக்கும் திமுக அரசின் முயற்சிகளாகும்.
மேலும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்க ளிப்பை அங்கீகரிக்கும் விதமாக வும் அயலகத் தமிழர் தினமாக ஜன வரி 12 ஆம் நாளினை ‘தமிழ் வெல் லும்’ என்னும் கருப்பொருளை மையமாக கொண்டு 2024 ஆம் ஆண்டு அயலகத் தமிழர் மாநாட் டினை வெற்றியோடு நடத்தியதும், பார்போற்றும் வகையில் பன் னாட்டு புத்தகக் கண்காட்சி நடத்தி யதும் தமிழ் வழியில் படித்த மாண வர்களுக்கு அரசுப் பணியில் முன் னுரிமை வழங்குவதும், திருக் கோயில்களில் தமிழ் வழிபாட் டினை முன்னிறுத்துவதுமான ஆகச் சிறந்த பல்வேறு தமிழ்ப் பணிகளை ஆற்றி வருகிறோம். ‘இன்பத் தமிழ் எங்கள் உயி ருக்கு நேர்’ என்பார் பாவேந்தர்.
நம் உயிருக்கு இணையான தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகை யில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத் தில் ஐந்து நாட்கள் சிந்தனைச் செயல்திறத்தோடு மாபெரும் அள வில் நடத்தப்படும்” இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல் உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டு, கடந்த 2010-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒருங்கிணைப்பில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.