tamilnadu

img

பெருங்குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கையேடு வெளியீடு

சென்னை, மே 17- உலக காஸ்ட்ரோலஜி அமைப்பு, தமிழ் நாடு காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் டிரஸ்ட் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள பெருங்குடல் புற்றுநோய் குறித்த விழிப் புணர்வு கையேட்டை தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் புதனன்று (மே 17) தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். இன்றைய நவீன வாழ்க்கை முறை களால் உலகமெங்கும் பெருங்குடல் புற்று நோய் ஏற்படுகிறது. பெருங்குடல் புற்று நோய் வராமல் தடுக்கும் வாழ்வியல் முறைக ளான சரியான உடல் எடையை பராமரித் தல், முறையான தொடர் உடற்பயிற்சி, புகையிலை மற்றும் மது வகைகளை தவிர்த்தல், அதிக பழங்கள், காய்கறிகளை உண்ணுதல், புற்றுநோய் முன்னெச்சரிக்கை பரிசோதனைகள் மேற்கொள்ளுதல் போன்றவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவப் பணிகள் இயக்குநர் வெங்கடா சலம், இரைப்பை குடல் நிபுணர் மற்றும் துறைத் தலைவர் கே.ஆர்.பழனிசாமி, இரைப்பை குடல் மருத்துவ ஆலோசகர்கள் பி.பிரம்மநாயகம், கார்த்திக் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.