tamilnadu

img

சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்ட பெண்களுக்கு சுயசக்தி விருதுகள்

சென்னை,செப். 16- திருநங்கைகளின் மேம்பாட்டிற்கு  பாடுபட்ட தற்காக சேஞ்ச் டிரஸ்ட் பவுண்டேஷன் நிறுவனர் தஸ்லீமா நஸ்ரீனுக்கு பெண்கள் சுய சக்தி விருது வழங்கப்பட்டது. சென்னையில் நடை பெற்ற விழாவில் 12 பிரிவுக ளில்  வீட்டில் இருந்து பொருட்களை தயாரித்து தொழில்முனைவோராக மாறிய 14 பெண்களுக்கு தொழில்முனைவோர் விருது வழங்கப்பட்டது. 6 பெண்கள் தங்களது துறையில் சிறப்பாக பணியாற்றிய தற்கான விருதுகளை பெற்ற னர். மூளை வளர்ச்சி குறை வாக பிறக்கும் குழந்தைக ளுக்கு பாடுபடும் டாக்டர் சுரேகா ராமச்சந்திரன், திரு நங்கைகளின் மேம்பாட்டி ற்காக அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வரும் தஸ்லீமா நஸ்ரீன், சிறப்பு குழந்தைகள் மற்றம் மாற்றுத்திறனாளிகளுக்கு பாடுபட்டு வரும் பராடைஸ் ஹோம்ஸ் நிறுவனர் மல்லிகா கோபால், மாற்று த்திறனாளி குழந்தைகள் மற்றும் தற்கொலை எண்ணம் கொண்டோரை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள சிநேகா இணை நிறுவனர் மீனா தாதா, திரைக்கலைஞர் ராதிகா சரத்குமார், வாழை இழை நாரில் இயற்கையான நாப்கின் தயாரிக்கும் பிலிஸ் நேச்சுரல்ஸ் இணை நிறுவ னர் நிவோதா  உள்ளிட்ட பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது. திரைக்கலைஞர் சுஹாசினி மணிரத்தினம், நேச்சுரல்ஸ் இணை நிறுவனர் சி.கே.குமாரவேல், பிராண்ட் அவாதார் தலைமைச் செயல் அலுவலர் ஹேமச்சந்திரன் உள்பட பலர் இந்த நிகழ்ச்சி யில் கலந்து கொண்டனர்.