சென்னை, அக். 29- விருதுநகர் மாவட்டத்தில் 1,504 அங்கன்வாடி மையங்கள் செயல்படு கிறது. இங்கு சுமார் 20,000 குழந்தைகள் சுமார் 8,000த்திற்கும் மேற்பட்ட கர்பிணி கள், சுமார் 10,000க்கும் மேற்பட்ட பாலூ ட்டும் தாய்மார்கள் என வந்து செல்கின்ற னர். இந்த மையங்களுக்கு முழுக்க, முழுக்க பெண்களும் குழந்தைகளும் மட்டுமே வந்து செல்லும் நிலையில் இந்த மையங்களுக்குள் கேமரா பொரு த்தினால் பெண்களின் தனியுரிமை பாதிக்கப்படும்.
குழந்தைகள் வளர்ச்சி திட்டம் என்பது மாநில அளவிலான திட்டம். இத்திட்டப்பணிகள் தொடர்பாக புதிய நடைமுறைகள் திட்டங்களை சென்னை யில் திட்ட ஒருங்கிணைப்பாளரான இந்திய ஆட்சி பணி அலுவலரே முடிவு எடுக்க முடியும். மாவட்ட அளவில் உள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட திட்ட அலுவலர்கள் மாநில முடிவுகள் அமுல்படுத்தப்படுவதை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் முடியும். மாவட்டத் திற்கு என்று புதிதாக தனி நட வடிக்கைள் எடுக்கக் கூடாது. தேவைப் பட்டால் புதிய நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மாநில திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பலாம். திட்ட ஒருங்கிணைப்பாளர் அந்த பரிந் துரையை ஏற்று மாநில முழுவதும் அமல்படுத்தலாம்.
அங்கன்வாடி ஊழியர்களின் பணி களை கண்காணிக்க தமிழக அரசு அங்கன்வாடி பணியாளர்களுக்கு கை பேசி வழங்கியுள்ளது. அக்கைப்பேசி யில் போஷான் டிராக்கர் மற்றும் தமிழ்நாடு ஐசிடிஎஸ் என இரண்டு செய லிகள் அனைத்து விதமான மைய நட வடிக்கைகளையும் அங்கன்வாடி பணி யாளர்கள் உடனுக்கு உடன் பதிவிட்டு வருகிறார்கள். காலையில் மையம் திறக்கும் போது செல்பி எடுத்து புகைப்படம் அனுப்புவது முதல் பணி முடிந்து மையத்தை மூடும் வரை செல்பி புகைப்படம் எடுத்து செயலில் அனுப்ப வேண்டும்.
தமிழ்நாட்டில் எந்த குக்கிராமத்தில் உள்ள மைய நடவடிக்கைகளையும் செயலி உதவியுடன் உடனுக்குடன் சென்னையில் இருந்து கண்காணிக்க முடியும். அங்கன்வாடி மைய நட வடிக்கைகளை கண்காணிக்க கேமார பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்யவில்லை. பரிசோதனை முறையில் அங்கன்வாடி மையங்களில் கேமாரா பொருந்துவது என்று தமிழக அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை. கேமாரா வாங்குவதற்கு தமிழக அரசு விருதுநகர் மாவட்டத்திற்கு எவ்வித நிதியும் ஒதுக்கீடும் செய்யவில்லை. நிதி ஒதுக்கீடு இல்லாமல் கேமாரா வாங்கிய ரகசியத்தை மாவட்ட ஆட்சியர் வெளி ப்படையாக அறிவிக்க வேண்டும்.
அங்கன்வாடி மையங்களை பற்றி மாவட்ட ஆட்சியரின் குடும்ப உறுப்பி னர்கள் தெரிவித்த தகவல் அடிப்ப டையில் கேமரா பொருந்துவதில் மாவட்ட ஆட்சியர் பிடிவாதப் போக்கு டன் செயல்பட்டு வருவதாக கூறப்படு கிறது. மாவட்ட ஆட்சியரின் முதிர்ச்சி இல்லாத நடவடிக்கையால் விருது நகர் மாவட்டத்தில் திட்ட நடவடிக் கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி மைய நடவடிக் கைகள் கேமரா மூலம் கண்காணிப்பது என்று மாவட்ட ஆட்சியர் முடிவு செய்து ள்ளதால் இனி கைபேசி செயலி மூலம் கண்காணிப்பது தேவை இல்லை என்பதால் தமிழக அரசு வழங்கிய கைபேசிகள் மாவட்ட திட்ட அலுவல ரிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. இப்பிரச்சனை தொடர்பாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியிடம் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மூத்த அமைச்சர் கள் முன்னிலையில் நேரில் சந்தித்து முறையிடப்பட்டது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரி வித்த கருத்தை ஏற்று 27.10.28 அன்று அங்கன்வாடி ஊழியர்கள் பணிக்கு திரும்பினார்கள். கேமரா பொருத்து வது தொடர்பாக எழுத்துபூர்வமாக எவ்வித கடிதமும் அங்கன்வாடி பணி யாளர்களுக்கு வழங்கப்படவில்லை. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த மறுநாள் 27.10.23 அன்று கேமரா பொருந்துவதற்கு அனு மதிக்கவில்லை எனக் கூறி 5 அங்கன் வாடி பணியாளர்களை ஒன்றியம் விட்டு ஒன்றியம் 60 கி.மீ. தொலைவில் மாவட்ட ஆட்சியர் மாறுதல் செய்துள்ளார். அங்கன்வாடி பணியாளர்களை 8 கி.மீ. க்குள் தான் மாறுதல் செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு மாறாக மாவட்ட ஆட்சியர் பழி வாங்கும் நோக்கத்துடன் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் செய்துள்ள நடவடிக்கைக்கு கடுமையான கண்ட னத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த பிரச்சனையை தொடர்ந்து, கடந்த 13.9.2023 முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்து போராட்டங்களும் ஜன நாயக முறைப்படி நடந்து வருகிறது. ஆனால் மாவட்ட ஆட்சியர் ஊழியர் களை மிரட்டும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக 27.10.2023 இரவு 9.30 மணிக்கு மீண்டும் விருதுநகரில் வரு வாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனிடம் பேச்சு வார்த்தை நடத்தினோம். அமைச்சர் எங்கள் முன்பே திட்ட அலுவலரிடம் பேசி பிரச்சனையை 28.10.2023 காலை 11 ணிக்கு பேசி முடிக்க சொன்னார்கள். இடமாற்றம் செய்யப்பட்ட உத்தரவை யும் நிறுத்தி வைக்க சொன்னார்கள். அதன்படி பேச்சுவார்த்தைக்கு சென்ற போது அமைச்சர் அறிவுரையையும் மாவட்ட ஆட்சியர் ஏற்காமல் திட்டத்தை முடக்கும் நிலையை ஏற்படுத்தி வரு கிறார். மாவட்ட ஆட்சியரின் இந்த நட வடிக்கையை எங்கள் சங்கம் வன்மை யாக கண்டிக்கிறது.
மாவட்ட ஆட்சியரின் இந்த நட வடிக்கையை கண்டித்து மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டமும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு கோரிக்கை நிறை வேறும் வரை போராட்டமும் நடை பெறும். எனவே தமிழ்நாடு அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் மாவட்ட ஆட்சியரின் இத்தகைய நடவடிக் கையை தடுத்து நிறுத்த வேண்டும் என மாநில அரசை தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் தலைவர் தலைவர் எஸ்.ரத்தினமாலா, பொதுச்செயலாளர் டி.டெய்சி ஆகியோர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.