சென்னை,ஆக. 9 மனித இனத்தை பொறுத்தமட்டில், வயது அதிகரிக்க அதிகரிக்க, மூளையும் மனமும் ஒருங்கி ணைந்து செயல்பட்டால் தான் சிந்தனையும் செயல் பாடுகளும் இயல்பாக இருக்கும் என்று இந்த துறை சார்ந்த ஆய்வுகளில் ஈடு பட்டுள்ள பேராசிரியர் மாதவ் தம்பிஷெட்டி கூறி னார். சென்னையில் மூளை மனம் செயல்பாடுகள் குறித்து புத்தி கிளினிக் நடத்திய கருத்தரங்கில் பேசிய அவர், இந்த ஒருங்கி ணைப்பில் பாதிப்பு ஏற்பட் டால் மறதி, பார்கின்சன், மன அழுத்தம் போன்ற உபாதை கள் ஏற்படும் என்றார். வயது அதிகரித்து முது மைப்பருவம் வர காரணம் என்ன, இத்தருணங்களில், உடல் வளத்திற்கும் மன வளத்திற்கும் தொடர்புண்டா இந்த சூழலை கட்டுப்பாட்டுக் குள் கொண்டுவர இய லுமா, உடல் பருமன், ஓய்வு தூக்கமின்மை, தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களின் பணிநேர மாற்றம், அதன் விளைவாக சாப்பிடும் நேரம் மாற்றம், தூக்க நேர மாற்றம் ஆகி யவை எந்த அளவுக்கு மூளையையும், மனதையும் உடலையும் பாதிக்கின்றன போன்ற பல விஷயங்கள் இதில் விவாதிக்கப்பட்டது என்று புத்தி கிளினிக் நிறு வனரும் சர்வதேச நரம்பியல் மருத்துவர்கள் சங்கத்தின் நிர்வாகியுமான எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறி னார். நரம்பியல் சம்மந்தப் பட்ட நிகழ்வுகள், செயல் முறைகள் குறித்து இந்த கருத்தரங்கில் கேள்வி பதில் பாணியில் விவா திக்கப்பட்டது.