கிருஷ்ணகிரி ஆக.21- கிருஷ்ணகிரியிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் மாவட்டத்தின் எல்லையில் ஊத்தங்கரை வட்டம் உள் ளது. சுமார் 185 வருவாய் கிராமங்களும், 50க்கும் மேற்பட்ட மிகச் சிறு குடியிருப்பு பகுதிகளும், தற்காலிகமாக இடம் பெயர்ந்து வாழும் குறவர், மலைவாழ் மக்கள் என சுமார் 3,25,000 மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்கும் கூடம் இருந்தும் அது பயன்பாட்டில் இல்லை. அதற்காக நிரந்தர ஊழியரும் நியமிக்கப் படவில்லை. என்றாவது ஒரு நாள் எக்ஸ்ரே எடுக்க கிருஷ்ணகிரியிலிருந்து வருவார்கள் எனக் கூறப்படுகிறது. கழிப்பறைகளை முறையாக பராமரிப்ப தில்லை. பரிசோதனைக் கூடங்கள் இருந்தும் பயனில்லை. தனியார் பரிசோதனை கூடங்க ளுக்கே நோயாளிகள் அனுப்பப்படுகின்றனர். கடந்த வாரம் எடை குறைவான குழந்தையை வைப் பதற்கு இங்குபேட்டர் கருவி இருந்தும் கிருஷ்ண கிரி மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்துள்ளனர். மேலும் குறைவான மருத்து வர்களே இருப்பதால் வரும் நோயாளிகள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு ஊத்தங் கரை மருத்துவமனையின் குறைபாடுகளை நீக்கி, ஆய்வகத்திற்கும், எக்ஸ்ரே கூடத்திற்கும் நிரந்தர மாக ஊழியர்களையும், போதிய மருத்துவர் களையும் நியமிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் ஊத்தங்கரை ஒன்றிய வார்டு உறுப்பி னர் கோவிந்தசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.