அம்பத்தூர், ஜூன் 25- சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் 7க்குட்பட்ட 82ஆவது வார்டு பகுதியில் கள்ளிக்குப்பம், மேனாம்பேடு, கங்கை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இந்த வார்டில் மேனாம்பேடு புற வழிச்சாலையை ஒட்டி சுமார் 2 ஏக்கரில் பூர்வீகமான மேனாம்பேடு குளம் உள்ளது. போதிய மழை இல்லாததால் தற்போது அந்த குளம் முற்றிலுமாக வறண்டு காணப்படுகிறது. இந்த குளத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. அந்த குடியிருப்புக ளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இந்த குளத்தில் விடப்படுகிறது. மேலும் குளத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் நிலத்தடி நீர் முழுவதும் மாசடைந்து விட்டதால் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் கூட தண்ணீரை காசு கொடுத்து வாங்க வேண்டியுள்ளதாக வும், கொஞ்சம் கொஞ்சமாக இந்த குளம் சில சமூக விரோதிகளால் ஆக்கிர மிக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறு கின்றனர். புறவழிச் சாலையை ஒட்டி இந்த குளம் இருப்ப தால் அதிகளவில் மழை நீரை சேமிக்க முடியும். எனவே சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக மழைநீர் சேகரிக்கும் வண்ணம் குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தி, சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த வார்டில் நடை பயிற்சிக்கான நடை மேடை இல்லை. எனவே இந்த குளத்தை சீர்படுத்தி, சுற்றுச் சுவர் அமைத்து நடைபயிற்சிக்கு பயன்படும் வகையில் நடைமேடை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் சு.பால்சாமி கூறுகையில், ‘கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே இந்த குளத்தை சீரமைக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தோம். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவும் சூழலில் கூட அதிகாரிகள் ஏரி, குளங்களை சீர மைக்காமல் உள்ளனர். எனவே உடனடியாக குளத்தை சீரமைக்க நட வடிக்கை எடுக்காவிட்டால் மக்களை திரட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம்’ என்றார்.