விழுப்புரம். அக்.29- மாவட்டத்தின் தலைநகர் விழுப்புரம், இங்கு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நகரத்தின் மையப் பகுதியில் பெருந்திட்ட வளாகம் உள்ளது. இங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எஸ்.பி.,-டி.ஐ.ஜி., ஆகியோர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட வன அலுவலகம், மாவட்ட நூலகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், சி.இ.ஓ., அலுவலகம், வேளாண் துறை அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம் உள்ளிட்ட மாவட்டத் தலைமை அதிகாரிகளின் அலுவலகங்கள் அமைந்துள்ளது. இந்த அலுவலகங்களுக்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிக ளில் இருந்து தினந்தோறும் நூற்றுக் கணக்கான மக்கள் வந்து செல்கின்ற னர். இந்த வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு செல்லும் தார் சாலைகள் கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்து, குண்டும், குழியுமாக மாறிவிட்டது, கடந்த சில நாட்களாக பெய்து சிறு சிறு மழைக்கே சாலை யில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றது. இவ்வழியே வாகனங்களிலும், நடந்தும் அலுவலகங்களுக்குச் செல்லும் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கடும் அவதியடைந்து வரு கின்றனர். பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பல்வேறு சாலைகள் சேத மடைந்து பல ஆண்டுகளாக சீர மைக்கப்படாமல் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி விழுப்புரம் வந்த போது அவசர அவசரமாக இருபக்க சாலையில் ஒரு பக்கம் மட்டுமே சாலையை சரி செய்தனர். அந்த வழியே முதல்வர் பயணம் செய்தார். பின்னர் மறு பக்கம் சாலை போடுவார்கள் என்று அதிகாரிகளும், பொது மக்களும் எதிர்பார்த்தனர். ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை இல்லை. மேலும் அந்த சாலைகள் குண்டும் குழியுமாக மாறி வருகிறது. இது குறித்து சமூக ஆர்வ லர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பி யுள்ளனர். ஆனாலும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் இல்லை. மாவட்டத்தில் சேதமடைந்த பல்வேறு கிராமப்புற, நகர்புற தார்ச் சாலைகள் தற்போது சீரமைக்கப் பட்டு வருகின்றது. ஆனால் பெருந்திட்ட வளாக சாலைகள், சீர மைக்கப் படாமல் கடந்த சில ஆண்டு களாக குண்டும் குழியுமாக மாறி விட்டது, விரைவில் வடகிழக்கு பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் பெருந்திட்ட வளாக சாலைகளை சீர மைக்கப்படுமா என அங்கு உள்ள அலுவலங்களில் பணியாற்றும் அதி காரிகள், பணியாளர்கள் மற்றும் தினந்தோறும் வந்து செல்லும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும், அவ்வழியே செல்லும் நகர மக்க ளும் கோரிக்கை எழுப்பி வருகின்ற னர்.