tamilnadu

தேர்தல் விதிமுறை தளர்வு: தேர்தல் ஆணையத்திற்கு விக்கிரமராஜா நன்றி

சென்னை, ஏப். 20- தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதி முறைகள் தளர்வால் வணிகர்கள் இயல்பாக வணிகத்தை மேற்கொள்ள உதவி யாக இருக்கும் என வணிகர் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக வணிகர்கள், பொது மக்கள், விவசாயிகள் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாவதை தேர்தல் ஆணை யரிடம் நேரில் விளக்கிக் கூறினோம். மேலும் வாக்களிப்பு முடிந்தவுடன், சனிக்கிழமை முதல் ஜூன் 4ஆம் தேதி வரை தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்ததை, மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்தவுடன், நடத்தை விதிமுறைகளை தேர்தல் நடை பெறும் இதர மாநில எல்லைகளில் மட்டுமே பின்பற்றிட அறிவுறுத்த வேண்டும் எனும் பேரமைப்பின் கோரிக்கையை ஏற்று, சனிக்கிழமை முதல் பறக்கும் படை கள் திரும்ப பெறப்படுவதாக அறிவித்து, மாநில எல்லைகளில் மட்டுமே பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இதனால், வணிகர்கள் இயல்பாக வணிகத்தை மேற்கொள்ளவும், அரசுக்கான வரி வருவாயை உறுதி செய்தி டவும் வழிவகுக்கும் என்பதை மனதார வர வேற்று தமிழ்நாடு என்றுமே அமைதிப் பூங்கா என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளும் விதமாக பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கும், தேர்தல் பணியாளர்களுக்கம், தேர்தல் நேர்மை யாக நடைபெற வாக்களித்த வாக்காளர்க ளுக்கும், பேரமைப்பின் பணிகளை தொய்வின்றி, நடத்த தோளோடு தோள் கொடுக்கும் வணிகர்களுக்கும், பேரமைப்பு நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.