tamilnadu

img

ஏரியை பாதுகாத்தவர்களையே ஆக்கிரமிப்பாளர்கள் என்பதா?

சிட்லப்பாக்கம் ஏரிக்கரை ஓரம் சர்வே எண் 256/1ல்  பெரியார் தெரு, ஆனந்தா நகர் உள்ளது. இங்கு 154 குடும்பங்கள்  60 வருடங்களாக வசித்து வருகின்றன. இந்த பகுதியானது ‘அ’ பதிவேட்டில் அரசு புறம்போக்கு என்றே உள்ளது. இங்குள்ள மக்கள் 1974ல் இருந்து ஆட்சியர்  உள்ளிட்ட அதிகாரிகளிடம் பட்டா கோரி வருகின்றனர். சர்வே எண் 256/2,  256/3, 256/4 ஆகியவற்றில் உள்ள  குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கப் பட்டுள்ளது. ஆனால் 256/1ல் உள்ள 154 வீடுக ளுக்கு மட்டும் நீர்நிலை என்று கூறி பட்டா மறுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அண்ணா நகர் குடியிருப்  போர் நல உரிமைச் சங்கத்தின் செயலாளர்  என்.வேதகிரி கேட்டபோது, “1938ம் ஆண்டு  சிட்லப்பாக்கம் கிராம வரைபடத்தில், பெரியார் தெரு வண்டிப் பாட்டையாக குறிப் பிடப்பட்டுள்ளது. பெரியார் தெரு  குடியிருப்பு,  ஏரி கரைக்கு வெளியே  உள்ளது. இந்த ஏரியை குடிசைமாற்று வாரி யம் மனையாக மாற்ற முயற்சித்தபோது அதனை தடுத்து நிறுத்தி, ஏரியை பாதுகாத்தோம். 1988-89ம் ஆண்டுக ளில் குடிசைமாற்று வாரி யம் பெரியார் தெருவில் 2.58 லட்சம் ரூபாய் செல வில் மேம்பாட்டு பணிகளை செய்தது. 2003ம் ஆண்டு காஞ்சிபுரம்  ஆட்சியர் உத்தரவின் பேரில் நமக்கு நாமே  திட்டத்தின் கீழ் ஏரியின் தெற்கு, மேற்கு,  வடக்கு பகுதியில் கரைகளை பலப்படுத்தி  பாதுகாத்து வருகிறோம். ஏரியை பாது காத்த எங்களுக்கு பட்டா தராமல்,  ஆக்கிரமிப்பாளர்களாக சித்தரிக்கின்ற னர். தாங்கலை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு பட்டா வழங்கும் அரசு,  கரைக்கு வெளியே உள்ளவர்களுக்கு பட்டா தர மறுக்கிறது. இது நியாயமா?” என்று கேள்வி எழுப்புகிறார்.