tamilnadu

img

திருவண்ணாமலையில் 361 பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடியில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலையில் 361 பயனாளிகளுக்கு  ரூ.1.58 கோடியில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை, மே 29- திருவண்ணாமலை வட்டாட்சியர் அலு வலகத்தில் நடைபெற்ற 1434 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாய நிறைவு விழாவில் மொத்தம் 361 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 58 லட்சத்து 57 ஆயிரத்து 695 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  வியாழனன்று (மே 29) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, திரு வண்ணாமலை மாவட்ட ஆட்சியர்  மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் தர்ப்பகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கினர். உதவிகளின் விவரம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக 108 பயனாளி களுக்கு பட்டா மாற்றம், நத்தம் பட்டா மாற்ற ஆணைகள், 80 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாற்ற ஆணைகள், 9 பயனாளிகளுக்கு வாரிசு மற்றும் ஒபிசி சாதிச் சான்றிதழ்கள், 99 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டா ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 38 பய னாளிகளுக்கு ரூ. 8 லட்சத்து 17 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதுபோன்று 3 பயனாளிகளுக்கு இரு ளர் சாதி சான்றிதழ்கள், 2 பயனாளிகளுக்கு மின் இணைப்பு சான்றிதழ்கள், வட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள், 4 பயனாளிகளுக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பீட்டில் இயற்கை வேளாண்மை சாகுபடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கண்ணகி, திருவண்ணாமலை வட்டாட்சியர் மோகனராமன், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.