tamilnadu

img

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கள்ளக்குறிச்சி, மே 25 - கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் தலைமையில் ரிசிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் முன்னிலையில் சனிக்கிழமை (மே 24)  நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சித் தலை வர் பேசுகையில், தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக எண்ணற்ற  நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இதன் படி மாற்றுத்திறனாளிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலி,மூன்று சக்கர நாற்காலி,காது கேட்கும் கருவி உள்ளிட்ட பல்வேறு உதவி உபகரணங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை, இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவி களும் வழங்கப்பட்டு வருகிறது என்றார். இதன் ஒரு பகுதியாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இணைப்பு சக்கரப் பொருந்திய பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் நலத்திட்டத்தின் கீல் 30 நபர்களுக்கு ரூ.30.54.000 மதிப்பீட்டில் இணைப்பு சக்கர பொருந்திய பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் புவனேஸ்வரி பெருமாள், சின்னசேலம் ஒன்றியக் குழுத் தலைவர் சத்யமூர்த்தி, மாற்றித்திறனாளிகள் நல அலுவலர் அந்தோணிராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.