tamilnadu

img

புத்தாண்டை வரவேற்று புதுச்சேரியில் புத்தக கண்காட்சி

புதுச்சேரி, டிச.31-  புத்தாண்டை வரவேற்கும் வகையில் பாரதி புத்தகாலயம் சார்பில் புதுச்சேரியில் புத்தக கண்காட்சி நடைபெற்றது.  

2024 - புத்தாண்டை புத்தகங்களுடன் கொண்டாடுவோம் என்பதை வலியுறுத்தி புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையத்தில்  புத்தக கண்காட்சி சனிக்கிழமை (டிச-30) துவங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.

துவக்க நிகழ்ச்சிக்கு புதுச்சேரி அறிவியல் இயக்க தலைவர் பேராசிரியர் ஆர்.மதி வாணன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சம்மேளன  பொதுச் செய லாளர் ராதாகிருஷ்ணன், முனைவர் க. பஞ்சாங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் கொளஞ்சியப்பன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர்.

எழுத்தாளர் கள் ராம்ஜி, ரவிச்சந்திரன், ரமேஷ் பைரவி, ஆசிரியர் பச்சைஅம்மாள், பாரதி புத்தகலாயத்தின் புதுச்சேரி கிளை பொறுப்பாளர் கணேசசுப்பிரமணியன் உட்பட திரளானோர் கண்காட்சியில் பங்கேற்றனர். 3நாள் நடைபெறும் கண்காட்சியில் நாவல், குழந்தை இலக்கி யம், கட்டுரைகள், அறிவியல் இலக்கியம் ஆகிய  புத்தகங்களுக்கு 10 முதல் 20 விழுக்காடு வரை தள்ளுபடி விலையில் புத்தகங்கள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.