சென்னை, டிச. 28 - சுயமரியாதை, சமதர்ம சமூகத்தை உருவாக்க ஒன்றுபட்டு போராடு வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கூறினார். சென்னை பெரியார் திடலில் திங்க ளன்று (டிச.27) நடைபெற்ற தோழர் தா.பாண்டியன் படத்திறப்பு நிகழ்ச்சி யில் அவர் பேசியது வருமாறு; முதல்வர், தோழர் தா.பாண்டியன் என்றாலே, தலைதாழாத பாண்டியன் என்றுதான் பொருள். எப்போதும், யாருக்கும், எந்தச் சூழ்நிலையிலும் அஞ்சாத பாண்டியனாகத்தான் வாழ்ந்தார். திமுகவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் கொள்கை குடும்பம் போன்றது. மதுரை மாநாட்டில் தா.பா.கர்ஜித்தபடி, சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு பாடம் புகட்டினோம். அந்த வெற்றியை பார்க்க அவர் இல்லை என்பது மனதை வாட்டுகிறது. தேசிய அளவில் பாசிச பாஜகவுக்கு பாடம் புகட்ட உறுதி ஏற்போம். தா.பா.-வின் அடையாளமே தோளில் இருந்த சிவப்புத் துண்டு தான்.
தோளில் தாங்கியது சிவப்புத் துண்டு மட்டுமல்ல; சிவப்பு இயக்கத் தையே எப்போதும் அவர் தாங்கி யிருந்தார். பிப்ரவரி மாதம் மதுரை மாநாட்டில் பேசிய தா.பா, “சாகும் வரை மக்களை தட்டி எழுப்புவேன்” என்றார். மரணத்துக்குப் பிறகும் எழுச்சியூட்டும் மனிதராக தோழர் தா.பா. திகழ்கிறார். ஜீவாவைப் போல தமிழ்நாடு முழுவதும் முழங்கி வந்தவர் தா.பா. தமிழ்நாட்டு மேடைகளை ஆட்சி செய்தவர்கள் பட்டியலிட்டால் அதில் தா.பா.-வின் பெயர் நிச்சயம் இடம் பெறும். அந்தளவுக்குத் தனிச் சிறப்பான பேச்சாளர். மிகப்பெரிய கருத்தியல்களையும் எளிமையாக, பாமர்களுக்கும் புரியும் வகையில் சொல்வதிலே ஆற்றல் பெற்றவர். கலைஞர் கருணாநிதியை போன்றே அரசியல், இலக்கியம் இரண்டிலும் பயணித்தவர் தா.பா. அரசியல் மேடைகளைப் போலவே இலக்கிய மேடைகளிலும் வலம் வந்தார். மேடைகளில் பேசுவதைப் போலவே, எழுத்திலும் பயணித்தார். அதற்கு அவர் எழுதிய புத்தகங்களே சாட்சி.
தனக்கு உடன்பாடு இல்லாதவை களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் விமர்சிக்கும் நெஞ்சுரம் கொண்டவர். சொந்தக் கட்சியில் இருக்கும் கொள்கை முரண்களைக் கூட அவர் சுட்டிக்காட்டுவதற்குத் தயங்கியது இல்லை. திராவிட இயக்கமும், பொது வுடைமை இயக்கமும் இணைந்து பயணிக்க வேண்டும். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், தந்தை பெரி யார், தோழர் ஜீவா ஆகியோர் இணைந்திருந்த காலம்போல் உருவாக வேண்டும் என்று அடிக்கடி குறிப்பிடுவார். அப்படித்தான் செயல் பட்டு வருகிறோம் என்பதன் அடை யாளம்தான் திராவிட இயக்கத் தலை வர்களும், பொதுவுடைமை இயக்கத் தலைவர்களும் இந்த மேடையில் ஒரு சேர உள்ளோம். நமக்குள் இருப்பது தேர்தல் உறவு அல்ல; கொள்கை உறவு. கம்யூனிஸ்ட் தோழர்கள் சொல் லும் பொன்னுலகை உருவாக்கத் தான் நினைக்கிறோம். அத்தகைய சுயமரியாதை, சமதர்ம சமூகத்தை உரு வாக்க அனைவரும் தோழமையுடன் செயல்படுவோம். அதுவே தா.பா.விற்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி. இவ்வாறு அவர் பேசினார்.
டி.ராஜா
சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா பேசுகையில், “ஏகாதிபத்தியத்தை தோலுரித்துக் காட்டியவர் தா.பா. சனாதன சக்திகளை சமரசமின்றி எதிர்த்து போராடினார். சமத்துவம், சமூக நீதிக்காக களத்தில் நின்றார். வலிமை மிக்க இந்தியா, வள மான தமிழகம் அமைய மாநில உரிமை களுக்காக போராடினார். ஒன்றிய ஆட்சி மாநில உரிமைகளை பறித்துக் கொண்டுள்ளது. ஆர்எஸ்எஸ் நேரடிக் கட்டுப்பாட்டில் பாஜக ஆட்சி நடை பெறுகிறது. அரசியல் சட்டத்தை, ஜன நாயகத்தை பாதுகாக்க ஒன்றுபட்டு போராடுவோம்” என்றார்.
கே.பாலகிருஷ்ணன்
“பேச்சாளர், எழுத்தாளர், கட்டு ரையாளர், வாதிடுபவர், தொழிற் சங்கத் தலைவர் என பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கினார் தா.பா. ஆங்கில பேராசிரியராக இருந்த வர், தமிழில் புலமைமிக்கவராகவும் விளங்கினார். தோழர் சங்கரய்யா வின் வகுப்பில் பங்கேற்று கட்சி உறுப்பினராக மாறினார். என்னுடைய முதல் ஆசிரியர் சங்கரய்யா என எப்போதும் தா.பா.கூறுவார். தான் எடுத்த காரியத்தை முடிக்க இறுதி வரை போராடுவார். தமிழர் மொழி, உரிமைக்காவும், தமிழ்நாடு உருவாகவும், பெயர்சூட்ட வும் சற்றும் குறைவில்லாமல் போராடி யவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். பயிற்று மொழியாகவும், ஆட்சி மொழி யாகவும் தமிழ் இருக்க வேண்டும் என்று முழங்கியவர்களும் கம்யூ னிஸ்ட்டுகள்தான். அதில் முத்தாய்ப் பாக இருந்தவர் தா.பா. மதச்சார் பின்மை, அரசியல் சாசனத்தின் அடிப்படைகள், கூட்டாட்சி தத்துவம் போன்றவற்றை பாதுகாக்க கரம்கோர்த்து நிற்போம். அதுதான் தா.பா.விற்கு நாம் செலுத்தும் அஞ்சலி” என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
இரா.முத்தரசன்
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசிய சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தோழர் தா.பா.வின் வாழ்க்கை வரலாற்றை, பன்முகத்தன்மையை பட்டியலிட்டார். “மணியம்மையார், பெரியார் சிலைகள் அவமதிக்கப்பட்டுள்ளது. இத்த கைய செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் ரீதியாக விமர்சிக்காமல், மறைந்த தலைவர்களை சிலர் தரம் தாழ்ந்து விமர்சிக்கின்றனர். இது தொடருமானால் எதிர் விளைவுகள் ஏற்படும்” என்றும் எச்சரித்தார். நிகழ்ச்சில் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, திராவிடர் கழகத் தலை வர் கி.வீரமணி, காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத்தலைவர் கே.எம்.காதர் ்மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவா`ஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், சிபிஐ புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஏ.எம்.சலீம் உள்ளிட்டோர் பேசினர்.