tamilnadu

சேலம் உருக்காலையை தனியாருக்கு தரவிட மாட்டோம்: முதல்வர் உறுதி

சென்னை, ஜூலை 5- சேலம் உருக்காலையை தனி யார்மயமாக்கும் முயற்சியை தடுக்க தமிழக அரசு அனைத்து வகையிலும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் என முத லமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் வெள்ளியன்று(ஜூலை 5)  கேள்வி  நேரம் முடிந்ததும், சேலம் உருக்  காலையை தனியார் மயமாக்கும்  விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது, நான்காயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சேலம் உருக்காலை ரூ.72 ஆயிரம்  கோடி முதலீட்டில் தொடங்கப் பட்டது. இந்த ஆலை மூலம் 2500  பேருக்கு நேரடியாகவும், 5 ஆயி ரம் பேருக்கு மறைமுக மாகவும் வேலை கிடைத்தது. மிகவும் லாப கரமாக இயங்கி வந்த இந்த ஆலை, மத்திய பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்போக்கால்  நட்டத்தில் செயல்படும் நிலைக்கு  தள்ளப்பட்டது” என்று குற்றம் சாட்டினர். சிறு இரக்கம்கூட இல்லாமல்  இந்த ஆலையை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்  துள்ளது. வருகிற 1.8.19-க்குள்  டெண்டர் எடுக்க உலக அளவி லான அறிவிப்பு வெளியிட்டுள் ளது. மத்திய பாஜக அரசின் இந்த  நடவடிக்கையை தடுத்து நிறுத்த பிரதமரை நேரில் சந்தித்து முத லமைச்சர் அழுத்தம் கொடுக்க  வேண்டும். இதற்கு ஆதரவாக திமுக எம்பிக்களும் முதல்வரு டன் வருவார்கள் என்றார். இதற்கு விளக்கம் அளித்த தொழில்துறை அமைச்சர் எம்.சி.  சம்பத், “சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என்பதுதான் அதிமுக வின் நிலைப்பாடு. இது குறித்து ஏற்கனவே நான்கு முறை மத்திய அரசுக்கு தெரிவித்துவிட்டோம். அதுமட்டுமின்றி, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கி றது. இதுகுறித்தும் பிரதமருக்கு  முதலமைச்சர் கடிதம் எழுதி யிருக்கிறார். எனவே சேலம் உருக்காலை தனியாருக்கு செல்  வதை தடுத்து நிறுத்த அனைத்து முயற்சிகளை எடுப்போம்” என்றார். இதனைத் தொடர்ந்த பேசிய  முதலமைச்சர், சேலம் உருக்கா லையை தனியார் மயமாக்க 2 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு முயற்சி செய்ததாகவும் அதனை ஜெயலலிதா முறி யடித்ததாகவும் கூறினார். மீண்டும் மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில், தமிழ கத்தை சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பி னர்கள் அனைவரும் ஒன்றாக சென்று பிரதமரையும் சம்மந்தப்  பட்ட அமைச்சரையும் சந்தித்து  முதல் கட்டமாக மனு கொடுக்க லாம்.  இரு அவைகளிலும் பிரச்ச னையை எழுப்பி இத்திட்டதை கைவிட அழுத்தம் கொடுக்கலாம் என்றும் சேலம் உருக்காலை தனி யார் மயமாவதை தடுக்க தமிழக  அரசு அனைத்து வகையிலும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் என்றும் முதல மைச்சர் உறுதியளித்தார்.