tamilnadu

மதுரை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவோம்: தேர்தல் அதிகாரி

சென்னை, மே 2-மே 23ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் என தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரத சாகு தெரிவித்தார். இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“ மதுரையில் வாக்கு எண்ணும் மையத்தில் வட்டாட் சியர் நுழைந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால், நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை தேர்தல் ஆணையம் செயல்படுத்தும்” என்றார்.3 வருடம் பணி முடித்த அனைவரையும் தேர்தலையொட்டி பணி இடமாற்றம் செய்துள்ளோம். 10 வாக்குச் சாவடி மறுதேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையம்தான் தேர்தல் தேதியை அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.இடைத் தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றத்தில் 4,037 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். ஒட்டப்பிடாரத்தில், 465 பேரும் சூளூரில் 4,123 பேரும் அரவக்குறிச்சி தொகுதியில் 3,073 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதால் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு, முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டதால் மட்டும் அவருக்கு தேர்தலில் நிற்க தடை விதிக்க முடியாது என்றார்.வாக்குப் பதிவுக்கு முன்னரும், வாக்குப் பதிவுக்கு பின்னரும் கருத்துக் கணிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் கருத்துக் கணிப்பு வெளியிடப்படுகிறதே என்ற கேள்விக்கு, யாராவது புகார் அளித்தால் அதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றார். இதுவரை 2,200 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய் யப்பட்டுள்ளதாகவும், அதில் 14 கிலோ மட்டுமே விசாரணையில் உள்ளதாகவும், மீதி நகைகள் சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டு விட்டதாக கூறினார்.