tamilnadu

img

மக்கள் தீர்ப்பை  ஏற்கிறோம் : மு.க.ஸ்டாலின்

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பினை தலைவணங்கி ஏற்கிறோம் என்று திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் டிவிட்ட ரில், இடைத்தேர்தலில் இரவு பகல் பாராது உழைத்த அனைவருக்கும் நன்றி. மக்கள் தீர்ப்பினைத் தலை வணங்கி ஏற்று, வாக்களித்த வர்களுக்கு நன்றி சொல்லும் அதேநேரத்தில், வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையைப் பெற, தொடர்ந்து உழைப்போம். கடந்த காலப் படிப்பினை களுடன், எதிர்காலத்தை நிச்சயம் வெல்வோம் என்று பதிவிட்டுள்ளார்.