54 பேரின் உயிரைக் குடித்த மெத்தனால் மாதவரம் ஆலையிலிருந்து பெறப்பட்டதா?
சென்னை, ஜூன் 22- 55 பேரின் உயிரைக் குடித்த மெத்தனால் சென்னை மாதவரம் ஆலையிலிருந்து பெறப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபு ரத்தில் விற்பனை செய்யப் பட்ட விஷ சாராயம் 55 பேரின் உயிரைக் குடித்தது. இன்னும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கள்ள சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் என்ற ரசாயனப் பொருள் விஷமாக மாறி பலரின் உயிரை பலி வாங்கியது தெரிய வந்துள்ளது.
இந்த மெத்தனாலை பெறுவதற்கு பலகட்டுப்பாடுகள் உள்ளன. இருந்தும் இவை எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடக்கத்தில் இவை ஆந் திரா மற்றும் புதுச்சேரியில் இருந்து பெறப்பட்டதாக கூறப் பட்டது.
தற்போது இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. காவல் துறை யிடம் பிடிபட்டுள்ள முக்கிய குற்றவாளியான மாதேசிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை மாதவரத்தில் உள்ள ஒரு டர்பன்டைன் ஆலையில் அதாவது எண்ணெய் சுத்தி கரிப்பு ஆலையில் இருந்து பெறப்பட்டது தெரிய வந்துள்ளது.
மெத்தனால் கிடைக்கும் இடத்தை ஆன்லைன் மூலம் தேடி அதை ‘தின்னர்’ என்ற பெயரில் ஜி.எஸ்.டி. வரி இல்லாமல் ‘போலி’ பில் தயாரித்து மெத்தனால் வாங்கியதும் தெரிய வந்துள்ளது. இந்த மெத்தனாலை மாதேசிடம் இருந்து கோவிந்தராஜ் என்பவர் வாங்கியுள்ளார். இவரிட மிருந்து விஷ சாராய வழக்கில் முக்கிய குற்றவாளியான சின்னதுரை வாங்கி அதில் தண்ணீர் மட்டுமே கலந்து விற்பனை செய்துள்ளார்.
அதாவது ஒரு லிட்டர் மெத்தனாளில் ஒருலிட்டர் தண்ணீர் கலந்து விற்றுள்ளார். இந்த சாராயத்தை வாங்கி குடிப்பவர்கள் போதை ஏறவில்லை என புகார் தெரிவித்தால் அதில் கலக்கப்படும் தண்ணீரை அரை லிட்டராக குறைத்து தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். அது விஷமாக மாறி பலரின் சாவுக்கு காரணமாகியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் மெத்தனாலை விற்பனை செய்த சென்னை மாதவரம் டர்பன்டைன் ஆலை உரிமையாளர் யார்? அங்கு மெத்தனால் யார் கட்டுப்பாட்டில் உள்ளது. எவ்வாறு அது அங்கிருந்து விற்பனை செய்யப்படுகிறது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி காவல் துறையினரும், அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுவிலக்கு கட்டுப்பாட்டு அறை
ராணிப்பேட்டை, ஜூன் 22 – ராணிப்பேட்டை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குறித்த தகவல்களை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் 90427-42564 என்ற கைபேசி எண்ணை தொடர்புகொண்டும், வாட்ஸ் அப் வாயிலாகவும் தகவல் அளிக்கலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
பழங்குடியினர் பள்ளிகளுக்கு உபகரணங்கள்
சிதம்பரம், ஜூன் 21- அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கல்விப் பணியுடன் சமூகப் பணியையும் செய்துவருகிறது.
இதன் ஒரு பகுதியாக இந்தியா சியாட்டில் குழு, உதவியுடன் சேலம் மாவட்டம் அருநூத்துமலையில் உள்ள 6 அரசு பழங்குடியினர் தொடக்க பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேவையான ரூ 2 லட்சம் மதிப்பி லான உபகரணங்கள் வழங்கப் பட்டது. இதற்கான ஆணையினை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம.கதிரேசன் பல்கலைக்கழகத்தில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினார். இத்திட்டத்தின் மூலம் இப்பள்ளி களில் பயிலும் 586-க்கும் மேற்பட்ட மலைவாழ் மாணவர்கள் மாணவிகள் பயன் பெற்றனர்.