tamilnadu

வாலிபர் சங்கம் போராட்ட அறிவிப்பு: பேச்சுவார்த்தையில் தீர்வு

சேலம், ஜூலை 10- பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சேலம் வடக்கு மாநகர் குழு சார்பில் சொர்ணபுரி மின்சார வாரிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சேலம் மாநகராட்சி ஐந்தாவது கோட்டம் பெரிய புதூர் பகுதி விநா யகர் கோவில் அருகில் உள்ள மின் கம்பம் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. மேலும் போயர் தெரு பகுதி யில் ஒரு முனை இணைப்பு என்று சொல்லக்கூடிய குறைந்த அளவு மின்சாரம் மட்டுமே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதியில் வசிய கூடிய மக்கள் மின் சாதன பொருட்களை பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குறைந்த அளவு மின்சாரம் வருவதால் தொலைக் காட்சி, மிக்ஸி போன்ற மின்சார பொருட்கள் பழுது அடைந்து வரு கிறது. இது சம்பந்தமாக மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறை யீட்டு நடவடிக்கை எடுக்காததால் இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் சேலம் மாநகர வடக்கு செயலாளர் ஆ.வி.கதிர்வேல் தலை மையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து மின்வாரிய அதிகாரி சீனிவாசன் மற்றும் அழகா புரம் காவல்துறையினர் சம்பந்தப் பட்ட இடத்தில் சென்று ஆய்வு மேற் கொண்டனர். இருப்பினும் குறிப்பிட்ட இடத்தில் மின்கம்பத்தை அகற் றும் வரை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடக்கும் என வாலி பர் சங்கத்தினர் தெரிவித்து, மின் வாரியஅலுவலகம் முன்பு அமர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் வாலிபர் சங்க மாநகர பொருளாளர் வெங்கடேஷ் நிர்வாகிகள் சசிகுமார், நாகராஜ், புரு ஷோத், மாதர் சங்க மாநகர வடக்கு தலைவர் எஸ்.காவிரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.