tamilnadu

img

காலி பணியிடங்கள் நிரப்பகோரி சென்னையில் தொழிற்பயிற்சி அலுவலர்கள் உண்ணாநிலை

காலி பணியிடங்கள் நிரப்பகோரி சென்னையில்  தொழிற்பயிற்சி அலுவலர்கள் உண்ணாநிலை

சென்னை, ஜூன் 10– அனைத்து நிலை காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி செவ்வாயன்று (ஜூன் 10) சென்னையில் தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர்கள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் நிய மனம் செய்யப்பட்டுள்ள இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடங்களை, மத்திய பயிற்சி இயக்குநரகம் வழிகாட்டுதல் படி 1:1 என்ற விகிதத்தில் நியமிக்க வேண்டும், திமுக தேர்தல் வாக்குறுதியான பிபிபி மற்றும் திறன்மிகு தொழிற்பயிற்சி திட்ட தொகுப்பூதிய பயிற்றுநர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 2005 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த பணிமனை உதவியாளர்களின் தொகுப்பூதிய காலத்தை பணிவரன் முறை செய்ய வேண்டும், பதவி உயர்வு மற்றும் காலமுறை இடமாற்றம் கலந்தாய்வு முறையில் வழங்க வேண்டும், திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனை வோர் அமைச்சகம் வழிகாட்டுதல் படி சான்றிதழ்தாரர்களுக்கு முதல்வர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தை சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத்தலைவர் மு.பாஸ்கரன், துணை பொதுச் செயலாளர் அண்ணா குபேரன், மாவட்டச் செயலாளர்கள் எம்.அந்தோணி சாமி (வடசென்னை), முத்துக்குமாரசாமி வேல் (தென்சென்னை), தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநிலத்தலைவர் வே.விஜயகுமரன், சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.ரமேஷ், பொருளாளர் என்.திருநாவுக்கரசு, துணைத் தலைவர் பி.நடராஜன்  உள்ளிட்டோர் பேசினர்.